பெய்ஜிங்: சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கின் ரயில்களில் இனி முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் அறிவித்துள்ளன.
கொவிட்-19 கிருமித்தொற்றால் இனி யாருக்கும் அதிக அபாயம் இல்லை என்று சீனாவின் சுகாதார வல்லுநர் ஒருவர் அண்மையில் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து ரயில்களில் முகக்கவச விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது.
கிருமிப் பரவல் தொடர்பில் சீனாவில் நடப்பில் உள்ள மற்ற விதிமுறைகளுக்கு ஏற்றவாறே இந்த விதிமுறை தளர்த்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

