கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம்மீது தாம் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாக டாக்டர் மகாதீர் முகம்மது கூறியுள்ளார்.
டாக்டர் மகாதீர் பிரதமராக இருந்தபோது அவர் தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் சொத்து சேர்த்துக்கொண்டதாக திரு அன்வார் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த விவகாரத்தின் தொடர்பில் திரு அன்வார், டாக்டர் மகாதீரிடம் மன்னிப்புக் கேட்க நேற்று முன்தினம் வரை கெடு கொடுக்கப்பட்டிருந்தது. கெடு முடிந்துவிட்டதையடுத்து டாக்டர் மகாதீர் இவ்வாறு அறிவித்துள்ளார்.
தாங்கள் புரிந்ததாகக் கூறப்படும் எல்லா தவறுகளுக்கும் நீதிமன்றத்தில் பதிலளிக்க அன்வார் தரப்பு தயாராய் இருப்பதாக அவரின் வழக்கறிஞர் கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் என்று டாக்டர் மகாதீரின் வழக்கறிஞர் சொன்னார்.

