பாலியல் துன்புறுத்தல்: மூவர் கைது

1 mins read
464f7740-e7cb-49b0-81bd-d5faeddcfd5d
-

ஈப்போ: மலேசியாவின் பேராக் மாநிலத்தில் 7 வயது சிறுமி ஒருவர் சாலையில் திக்கு தெரியாமல் நடந்துகொண்டிருந்தார். அவரை வழிப்போக்கர் ஒருவர் காவல்துறையினரிடம் அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் அச்சிறுமிக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது. சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அச்சிறுமியின் தாயார், தாயாரின் முன்னாள் கணவர், அவரது தற்போதைய கணவர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.