விரலைக் கடித்துத் துப்பிய போதைப் புழங்கி

1 mins read
532abde9-990a-4695-82b7-7f720a0fc527
-

கோலா­லம்­பூர்: போதைப்­பொ­ருள் உட்­கொண்டு தன்­னிலை மறந்த ஆட­வர் ஒரு­வர் காவல் நிலை­யத்­தில் தகராறு செய்து காவல் அதி­கா­ரி­யின் விர­லைக் கடித்துத் துப்­பி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வம் மலே­சி­யத் தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரில் உள்ள சுங்கை பிசி காவல் நிலை­யத்­தில் கடந்த திங்­கட்­கிழமை­யன்று நிகழ்ந்­தது.

காவல் நிலை­யத்­தின் பாது­கா­வல் சாவ­டிக்­குச் சென்ற அந்த போதைப் புழங்கி அங்­கிருந்த அதி­காரி மீது அமி­லத்தை வீசி­ய­டிக்க இருப்­ப­தாக மிரட்­டல் விடுத்து போத்­தல் ஒன்­றில் இருந்த திர­வத்தை அவர் மீது பீய்ச்­சி­ய­டித்­தார்.

பிறகு காவல்­நி­லை­யத்­துக்­குள் அத்­து­மீறி நுழைய முயன்­ற அந்த ஆட­வரை மூன்று அதி­கா­ரி­கள் தடுக்க முயன்­ற­னர்.

அப்­போது அதி­கா­ரி­யின் விரலை அந்த ஆட­வர் கடித்­துத் துப்­பி­னார்.

அதி­கா­ரி­யின் விர­லின் மேல் பகுதி துண்­டிக்­கப்­பட்­டது.

தாக்­கு­தல் நடத்­திய 34 வயது ஆட­வர் கைது செய்­யப்­பட்­டார்.