மலேசியா விசாரணை

மலேசியா விசாரணை

1 mins read
b80bf6e6-ee82-43ab-a957-bdee8efd3f7b
-

கோலா­லம்­பூர்: நூற்­றுக்­க­ணக்­கான வெளி­நாட்டு ஊழி­யர்­கள் கடப்­பிதிழ் இல்லாமலும் வேலை இல்­லா­மலும் தெற்காசி­யா­வி­லிருந்து மலே­சி­யா­வுக்கு எவ்­வாறு நுழைந்­த­னர் என்­பதை கண்­ட­றிய மலே­சியா விசா­ரணை நடத்­து­கிறது.

மலே­சி­யா­வில் வேலை செய்ய பெரும் அள­வி­லான தொகை­யைச் செலுத்­தி­யும் இந்த ஊழி­யர்­க­ளுக்கு இப்­ப­டிப்­பட்ட அவ­ல­நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக மலே­சிய அதி­கா­ரி­களும் வெளிநாட்டு ஊழி­யர்கள் உரிமை அமைப்­பி­ன­ரும் தெரி­வித்­துள்­ள­னர். மலே­சி­யா­வில் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் துன்­பு­றுத்­தப்­ப­டு­வ­தாக அதி­ருப்­திக் குரல்­கள் எழுந்­துள்­ளன.

மலே­சி­யா­வில் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் துன்­பு­றுத்­தப்­ப­டு­வது, ஏமாற்­றப்­ப­டு­வது குறித்து அண்­மைய ஆண்­டு­க­ளா­கப் பல புகார்­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

கடந்த ஆண்டு டிசம்­பர் மாதத்­தி­லி­ருந்து பங்­ளா­தேஷ், நேப்­பா­ளம் ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து நூற்­றுக்­க­ணக்­கான ஊழி­யர்­கள் மலே­சியா வந்­தி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அவர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் தங்­க­ளுக்கு வேலை வாங்­கித் தரு­வ­தாக வாக்­க­ளித்த முக­வர்­களி­டம் 20,000 ரிங்­கிட் (S$6,000) செலுத்­தி­ய­தா­கத ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தி­டம் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் உரிமை அமைப்­பு­க­ளைச் சேர்ந்த அதி­காரி­கள் தெரி­வித்­த­னர்.

பணத்­தைப் புரட்ட பலர் கடன் வாங்­கி­ய­தாக அறி­யப்­ப­டு­கிறது. ஆனால் மலே­சி­யா­வில் வேலை கிடைக்­கா­த­தால் கடனை அடைக்க முடி­யா­மல் அவர்­கள் திண்­டா­டு­கின்­ற­னர்.

அது­மட்­டு­மல்­லாது, அவர்­கள் மலே­சியா வந்­த­டைந்­த­தும் அந்த முக­வர்­கள் அவர்­க­ளது கடப்பிதிழ்­களை அவர்­க­ளி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொண்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. பாதிக்கப்­பட்ட இந்த வெளி­நாட்டு ஊழி­யர்­கள் கொத்­த­டி­மை­க­ளாக மாறும் அபா­யம் அதி­கம் இருப்­ப­தாக சமூக ஆர்­வ­லர்­கள்­ க­வலை தெரி­வித்­துள்­ள­னர். இந்த விவ­கா­ரம் குறித்து விசா­ரணை நடத்­து­வ­தாக மலே­சிய அர­சாங்­கம் தெரி­வித்­துள்­ளது. ஆனால் அது­தொ­டர்­பான விவ­ரங்­களை வெளி­யிட அது மறுத்­து­விட்­டது.