தாய்லாந்தில் காற்று மாசு; பலருக்குப் பாதிப்பு

தாய்லாந்தில் காற்று மாசு; பலருக்குப் பாதிப்பு

1 mins read
5dda1b66-6dd3-45e1-9e93-7335c7d7432a
-

பேங்­காக்: தாய்­லாந்­தில் இவ்­வாண்டு தொடங்­கி­ய­தி­லி­ருந்து ஏற்­பட்­டுள்ள காற்று மாசு கார­ண­மாக ஏறத்­தாழ 2.4 மில்­லி­யன் பேர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­றுள்­ள­னர்.

அவர்­க­ளுக்கு காற்று மாசு தொடர்­பாக ஏற்­படும் உடல்­ந­லப் பிரச்­சி­னை­கள் ஏற்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

காற்று மாச­டைந்­தி­ருப்­ப­தால் தாய்­லாந்­தின் பல பகு­தி­களில் புகை­மூட்­டம் ஏற்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

நேற்று காலை நில­வ­ரப்­படி உல­கி­லேயே காற்று மாசு கார­ண­மாக அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்ள நக­ரங்­களில் தாய்­லாந்து தலை­நகர் பேங்­காக்­கும் தாய்­லாந்­தின் வடக்­குப் பகு­தி­யில் உள்ள சியாங் மாய் நக­ர­மும் அடங்­கும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

தாய்­லாந்­தில் இவ்­வா­ரம் மட்டும் காற்று மாசு கார­ண­மாக உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்டு 184,465 பேர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­மதிக்­கப்­பட்­ட­தாக அந்­நாட்­டின் பொதுச் சுகா­தா­ரத் துறை தெரி­வித்­தது.

பாதிக்­கப்­பட்­டோ­ரில் பல­ருக்கு சுவா­சப் பிரச்­சி­னை­கள், தோல் தொடர்­பான பிரச்­சி­னை­கள், கண் அழற்சி, தொண்டை வலி போன்ற பிரச்­சி­னை­கள் ஏற்­பட்­ட­தாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.