பெண்மீது சூடான சூப்பை ஊற்றிய பெண்

1 mins read
20c5ca7d-b9a9-4040-a228-39165094e21f
-

தைப்பே: தைவா­னில் S$870 கட­னுக்­காக நடந்த சண்­டை­யில் பெண் ஒரு­வர் மற்­றொரு பெண்­ணின் முகத்­தில் கொதிக்­கும் சூப்பை ஊற்­றி­விட்­டார்.

அல­றித் துடித்த அந்­தப் பெண் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார். அவ­ரது முகத்­தி­லும் கழுத்­தி­லும் கடு­மை­யான தீப்­புண்­கள் ஏற்­பட்­டன. தைவா­னிய பொழு­து­போக்­குக் கூடம் ஒன்­றில் இரு பெண்­கள் சண்­டை­யி­டும் காணொளி சமூக ஊட­கங்­களில் பர­வி­யது.

இரு பெண்­க­ளின் சண்­டையை ஆண் ஒரு­வர் விலக்­கி­வி­டு­வ­தும் அப்­போது ஆத்­தி­ர­மடைந்த ஒரு பெண் அங்கு அடுப்­பில் இருந்த சூடான சூப்பை மற்­றொரு பெண் மீது ஊற்­று­வ­தும் காணொ­ளி­யில் பதி­வாகி இருந்­தது. ஸித்­துன் மாவட்­டத்­தில் நடை­பெற்ற சம்­ப­வம் தொடர்­பில் வெள்­ளிக்­கிழமை அதி­காலை 4.20 மணி­ய­ள­வில் தக­வல் கிடைத்­த­தாக காவல்­துறை கூறி­யது.