யங்கூன்: மியன்மாரில் வீசிய சூறாவளிக்குப் பலியானோர் எண்ணிக்கை 8க்கு அதிகரித்து உள்ளது. அதேபோல காயமடைந்தோர் எண்ணிக்கையும் 128க்குக் கூடிவிட்டதாக அறநிறுவன அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது.
தலைநகர் நேப்பிடா அருகில் உள்ள இரண்டு கிராமங்களில் வெள்ளிக்கிழமை மாலை 6.10 மணியளவில் கடுமையாக வீசிய புயல்காற்றில் 232 வீடுகள் சேதமடைந்ததாகவும் அந்த அமைப்பு கூறியது.

