கேன்பெரா: ஆஸ்திரேலிய அரசாங்கம் அதன் தொலைதூர தாக்குதல் ஆற்றல், உள்நாட்டில் ஆயுதங்கள் தயாரிப்பு, அரசதந்திரம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை செலுத்தவிருக்கிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அந்நாட்டின் ஆகப்பெரிய தற்காப்பு மாற்றங்களைப் பரிந்துரைக்கும் மறுஆய்வு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
தொலைதூர ஏவுகணைகள், ராணுவ வானூர்திகளை வாங்குவது தொடர்பிலான செலவினத்துக்கு அரசாங்கம் முன்னுரிமை செலுத்த அது பரிந்துரைத்தது.
இந்த மறுஆய்வை "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான பணி," என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி ஆல்பனிஸ் வர்ணித்தார்.
ஆஸ்திரேலியா அமெரிக்காவுடன் சேர்ந்து மேலும் அணுக்கமாகப் பணியாற்றும். பசிபிக், தென்கிழக்காசிய நாடுகள் உடனான தற்காப்பு ஒத்துழைப்பையும் ஆஸ்திரேலியா வலுப்படுத்த வேண்டும் என்று அந்த மறுஆய்வு குறிப்பிட்டது.
அடுத்த பத்து ஆண்டுகளில் தற்காப்புக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கும். ஆனால், அடுத்த நான்கு ஆண்டுகளில் அது A$19 பில்லியன் (S$17 பி.) என்ற அளவில் நிலையாக இருக்கும்.

