'இணையத்தில் அடக்குமுறை அதிகரிக்கிறது'

'இணையத்தில் அடக்குமுறை அதிகரிக்கிறது'

1 mins read
428d56e4-40ff-4107-acc0-9e4e5fc627cc
-

வாஷிங்­டன்: சீனா, ஈரான் போன்ற நாடு­கள் இணை­யத்­தில் அதிக அடக்­கு­முறை நட­வடிக்கை­களை மேற்­கொள்­வ­தாக அமெ­ரிக்­கா­வின் முன்­னணி வேவுத்­துறை அதி­காரி ஒரு­வர் எச்­ச­ரித்­துள்­ளார். உல­க­ள­வில் ஜன­நா­யக முறை­யில் இருக்­கும் நடை­மு­றை­கள் பாதிக்­கப்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார்.

பொய்த்­த­க­வல், ஊடு­ரு­வல் மென்­பொ­ருள் உள்­ளிட்ட தொழில்­நுட்ப முறை­கள் போன்­றவை அமெ­ரிக்­கா­வின் தேசி­யப் பாது­காப்­புக்­குப் பாதிப்பை ஏற்­படுத்­து­வ­தாக திரு­வாட்டி ஏவ்­ரில் ஹெய்ன்ஸ் கூறி­னார்.

சிறி­த­ளவு எதிர்ப்பு இருந்­தா­லும் அதை அடக்க தொழில்­நுட்ப முறை­கள் பயன்­ப­டுத்­தப்­படு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார். செயற்கை நுண்­ண­றி­வின் தாக்­கம் நிலை­மையை மோச­மாக்­கு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.