லண்டன்: வெற்றிகரமாக நெட்டோட்டத்தை முடித்தவர் வீடு திரும்பியபோது வழியிலேயே உயிரிழந்த சம்பவம் லண்டனில் நிகழ்ந்தது.
நாட்டிங்ஹமைச் சேர்ந்த ஸ்டீவ் ஷேங்ஸ், 45, என்ற ஆடவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடந்த நெட்டோட்டத்தில் பங்கேற்றார். பந்தயத் தொலைவை 2 மணி நேரம் 53 நிமிடம் 26 நொடிகளில் அவர் ஓடிக் கடந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
பந்தயத் தொலைவை ஓடிக் கடந்த மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய அவரை மரணம் தழுவியது. அவரது மரணத்திற்கான காரணம் மருத்துவச் சோதனைக்குப்பின் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
"ஸ்டீவ் ஷேங்சின் மரணச் செய்தி லண்டன் நெட்டோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது," என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
ஸ்டீவின் நினைவாக நிதிதிரட்டு இணையப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
42.195 கிலோமீட்டர் பந்தயத் தொலைவை 48,000க்கும் மேற்பட்டோர் முழுவதுமாக ஓடிக் கடந்தனர். ஆண்களுக்கான பந்தயத்தை கென்யாவின் கெல்வின் கிப்டும் வென்றார்.

