ஸெலென்ஸ்கியுடன் பேசிய சீன அதிபர் ஸி

ஸெலென்ஸ்கியுடன் பேசிய சீன அதிபர் ஸி

1 mins read
f9128953-723c-4a11-a8d4-44b7074029a1
-

கியவ்: ரஷ்யா உக்­ரேன்­மீது படை­யெ­டுத்த பிறகு முதன்­மு­றை­யாக சீன அதி­பர் ஸி ஜின்­பிங், உக்­ரேன் அதி­பர் வொலொ­ட­மிர் ஸெலென்ஸ்­கி­யு­டன் பேசி­யுள்­ளார். சீனா­வைச் சேர்ந்த ஒரு குழுவை உக்­ரே­னுக்கு அனுப்ப திரு ஸி திட்­ட­மிட்­டுள்­ள­தா­க­வும் தெரி­விக்­க­பப்ட்­டது.

சீனா என்­றுமே அமை­தி­யின் பக்­கம்­தான் நின்­றி­ருக்­கிறது எனத் திரு ஸி கூறி­ய­தாக சீன அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான ஊட­கம் நேற்று தெரி­வித்­தது.

"உக்­ரேன் நெருக்­க­டி­யைப் பொறுத்­த­வரை சீனா என்­றுமே அமை­தி­யின் பக்­கம்­தான் நின்­றுள்­ளது. அமை­திக்­கான பேச்­சு­வார்த்தை நடத்­த ஊக்­கு­விப்­பதே சீனா­வின் நிலைப்­பாடு," என்று திரு ஸெலென்ஸ்­கி­யு­ட­னான தொலை­பேசி உரை­யா­ட­லின்­போது திரு ஸி கூறி­ய­தாக சிசி­டிவி ஊட­கம் குறிப்­பிட்­டது.

உக்­ரே­னுக்­கும் மற்ற நாடு­களுக்­கும் சீனா­வைப் பிர­தி­நிதிக்­கும் குழு அனுப்­பப்­படும் என்று சீன வெளி­யு­றவு அமைச்­சின் அதி­கா­ரி­யான திரு யு ஜுன் நேற்று தெரி­வித்­தார். எனி­னும், அதற்­கான கால­கட்ட குறித்த தக­வல்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.