இஸ்தான்புல்: துருக்கியின் அதிபர் ரெசெப் தயீப் எர்டோவான் நோய்வாய்ப்பட்டுள்ளபோதிலும் அடுத்த மாதம் நடைபெறும் நாடாளுமன்ற, அதிபர் தேர்தல்களுக்காக ஓய்வின்றி பிரசாரம் செய்து வருகிறார்.
ரஷ்யா கட்டிய அணுவாயுத ஆலையை அவர் காணொளி இணைப்பு மூலம் திறந்துவைத்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அப்போது 69 வயது அதிபர் எர்டோவானுக்குத் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
பேட்டியின்போது திரு எர்டோவான் பலவீனமாகக் காணப்பட்டார். பேட்டி தொடங்கி பத்து நிமிடங்களில் நிகழ்ச்சி தடை
பட்டது. யாரோ இடைவிடாது இருமும் சத்தம் கேட்டது.
கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் கழித்து தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் எர்டோவான் பேட்டி தடைபட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

