சிட்னி: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிராகப் பல ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. சில இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் வேலை விசா பெறும் நோக்குடன் மாணவர் விசாவுக்கு விண்ணப்பிப்பதாகக் கருதப்படுவது இதற்குக் காரணம்.
மாணவர் விசாவுக்கான நிபந்தனைகளை முடுக்கிவிடப்போவதாக ஆஸ்திரேலியாவின் மத்திய அரசாங்கம் கடந்த வியாழக்கிழமையன்று அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
குறைந்தது ஐந்து ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் சில இந்திய மாநிலங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு எதிராகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக 'தி ஏஜ்' நாளிதழ் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. சில பல்கலைக்கழகங்கள் தடையும் விதித்துள்ளன.
பொதுவாக வடஇந்திய மாநிலங்களைச் சேர்ந்தோர் ஆஸ்திரேலியாவின் மாணவர் விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்து. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இப்பிரச்சினை அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

