தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எண்ணெய்க் கிடங்குமீது தாக்குதல்

2 mins read
356dc143-785c-40ec-9878-0cb9f63f0c85
-

கிரை­மியா: ர‌ஷ்­யா­வின் கட்­டுப்­பாட்­டில் உள்ள கிரை­மி­யா­வில் உள்ள செவஸ்­ட­போல் பகு­தி­யில் ஆளில்லா வானூர்­தி­யின் மூலம் நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லைத் தொடர்ந்து எண்­ணெய்க் கிடங்கு ஒன்று கொழுந்­து­விட்டு எரி­யத் தொடங்­கி­யது.

இது உக்­ரே­னியத் தாக்­கு­தலாக இருக்­க­லாம் என நம்­பு­வதாக செவஸ்­ட­போல் பகு­தி­யின் ர‌ஷ்ய ஆளு­ந­ரான மிக்­கெல் சொன்­னார்.

உயி­ரி­ழப்பு எது­வும் இல்லை என்ற அவர், கிடங்­கில் அதிக அளவு எண்­ணெய் இருப்­ப­தால் தீயைக் கட்­டுப்­ப­டுத்த அதிக நேரம் ஆகக்­கூ­டும் என்­றும் சொன்­னார். இத்­தாக்­கு­த­லுக்கு உக்­ரே­னிய அதி­கா­ரி­கள் நேர­டி­யாக பொறுப்­பேற்­க­வில்லை என்ற­போ­தும் ர‌ஷ்­யா­வின் மூர்க்கமான தாக்­கு­தலுக்குப் பதி­லடி தரு­வோம் என்­ற­னர்.

நேற்று முன்­தி­னம் உக்­ரே­னிய குடி­யி­ருப்­புப் பகு­தி­களில் ர‌ஷ்ய படை­யி­னர் நடத்­திய ஏவு­க­ணைத் தாக்­கு­த­லில் குறைந்­தது 25 பேர் கொல்­லப்­பட்­ட­னர். இதை­ய­டுத்து, உக்­ரே­னிய அதி­பர் ஸெலன்ஸ்கி, தம் நாட்­டின் வான்­வழிப் பாது­காப்பை உறுதிசெய்­வ­தற்­கான ஆயு­தங்­களை வழங்­கு­மாறு நட்பு நாடு­க­ளுக்கு வேண்டுகோள் விடுத்­துள்­ளார்.

மேலும், ர‌ஷ்­யப் படை­யி­ன­ரால் கடத்­தப்­பட்டடுள்ள உக்­ரே­னியப் பிள்­ளை­களை மீட்­ப­தற்கு உத­வு­மாறு சீன அதி­பர் ஸி ஜின்­பிங்­கைக் கேட்டுக்கொண்­ட­தா­க­வும் அவர் சொன்­னார்.

"உக்­ரே­னிய பிள்­ளை­க­ளைக் கடத்­திய ர‌ஷ்­யா­விற்கு அனை­வரும் ஒன்று சேர்ந்து அழுத்­தம் கொடுக்க வேண்­டும்.

"ஐநா­வும் மேலும் பலரும் எடுக்கும் முயற்­சி­க­ளால் எந்­தப் பயனும் இல்லை. எனவே, சீன அதி­ப­ரி­டம் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளேன்," என்று ஸெலன்ஸ்கி சொன்­னார்.

உக்­ரேன் மீதான ர‌ஷ்­யா­வின் படை­யெ­டுப்­பிற்­குப் பிறகு முதன்­மு­றை­யாக சீன அதி­ப­ரும் உக்­ரேனிய அதி­ப­ரும் கடந்த புதன்­கிழமை தொலை­பே­சிவழி பேசி­னர்.­ உக்­ரேன்-ர‌ஷ்யா பிரச்­சி­னை­யில் நடு­நி­லையைப் பின்­பற்­று­வதாகச் சீனா கூறி வரு­கிறது. சீன அதி­பர் சென்ற மார்ச் மாதம் ர‌ஷ்ய அதி­பரை நேரில் சந்­தித்துப் பேசி­னார்.