மிச்சிகன்: அமெரிக்காவில் பள்ளி பேருந்தின் ஓட்டுநர் திடீரென தடுமாறி, மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, உடனடியாக பேருந்தை நிறுத்திய சிறுவனின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
அமெரிக்காவின் மிச்சிகன் நகரைச் சேர்ந்த டில்லன் ரீவ்ஸ், மிச்சிகனின் வாரனில் உள்ள கார்ட்டர் நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகி
றார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி பள்ளி பேருந்தில் 66 மாணவ மாணவிகள் சென்றனர்.
அப்போது வண்டியை ஓட்டிய ஓட்டுநருக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனது. எனவே, அவரால் தொடர்ந்து பேருந்தை ஓட்ட முடியாத சூழல் ஏற்பட்டது.
அப்போது பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த மாணவன் டில்லன் ஓட்டுநர் தடுமாறுவதைக் கவனித்தான்.
உடனே தாவிக்குதித்து ஓட்டுநர் அருகே சென்ற மாணவன் வண்டியை பத்திரமாக நிறுத்தினான்.
பின்னர் 911 என்ற அவசர எண்ணுக்கு யாராவது அழையுங்கள் எனக் கத்தினான்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ஓட்டுநரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

