டெக்சசில் ஐவரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிக்காரனுக்கு வலைவீச்சு

டெக்சசில் ஐவரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிக்காரனுக்கு வலைவீச்சு

1 mins read
608c06f5-60b4-4e1b-87c6-fee7e4a55561
-

கிளிவ்­லாண்ட்: டெக்­ச­சில் உள்ள கிளிவ்­லாண்­டில் எட்டு வயது குழந்தை உட்­பட ஐந்து பேரை கொடூ­ர­மாகச் சுட்­டுக் கொன்ற கொலை­யா­ளியை காவல்­து­றை­யி­னர், மத்­திய புல­னாய்­வுப் பிரி­வின் உத­வி­யு­டன் தேடி வரு­கின்­ற­னர்.

வீட்­டின் வெளியே துப்­பாக்­கி­யால் சுட்­டுக் கொண்­டி­ருந்த அவனை நிறுத்­து­மாறு அண்டை வீட்டார் கூறியுள்ளனர். இதை­ ய­டுத்து துப்­பாக்­கி­க்கா­ரன் பக்­கத்து வீட்­டில் இருந்த ஐவரை சுட்­டுக் கொன்­றுள்­ளான்.

"அவனை ஆயு­தம் ஏந்­திய அபா­ய­க­ர­மா­ன­வன்," என்று மத்­திய புல­னாய்­வுப் பிரி­வின் சிறப்பு அதி­காரி ஜேம்ஸ் ஸ்மித் தெரி­வித்­தார்.

"அவன் வெளியே ஏதோ ஒரு இடத்தில் இருக்­கி­றான். அவன் சமூ­கத்­துக்கு ஆபத்­தா­ன­வன்," என்­றார் அவர்.

வெள்­ளிக்­கி­ழமை இரவு ஃபிரான்­சிஸ்கோ ஒரோ­பீஸா, 38, அண்டை வீட்­டுக்­கா­ரர்­களை துப்­பாக்­கி­யால் சுட்­டுக் கொன்றான் என்று கூறப்படுகிறது.

வீட்­டில் குழந்தை தூங்­கிக் கொண்­டி­ருப்­ப­தால் வெளி­யி­டத்­தில் துப்­பாக்­கி­யால் சு­டுவதை நிறுத்து என்று அண்டை வீட்­டர்­கள் அவ­னி­டம் தெரிவித்தனர்.

ஆனால் அவர்களின் வேண்டு­கோளை புறக்­க­ணித்த அவன், ஒரு கட்­டத்­தில் அண்டை வீட்­டா­ரின் வீட்­டுக்­க­தவு அருகே துப்­பாக்­கி­யு­டன் செல்­வது கண்­கா­ணிப்­புக் கேம­ரா­வில் பதி­வா­கி­யுள்­ளது என்று சான் ஜெசின்டோ ஷெரிஃப் கிரேக் கேபெர்ஸ் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

"பின்­னர் அதே வீட்­டின் பல அறை­களில் பலர் இறந்­து­கி­டந்­த­னர். இரண்டு பெண்­கள் படுக்கை அறை­யில் கொல்­லப்­பட்­ட­னர். இவர்­கள் உயிர்­பி­ழைத்த இரண்டு குழந்­தை­யைக் காப்­பாற்றுவ­தற்­காக தங்­கள் உயிரைப் பண­யம் வைத்­துள்­ள­னர்," என்­றார் அவர். ஒரோ­சீ­ஸா­வின் கைப்­பே­சியை வைத்து காவல்­து­றை­யி­னர் அவனைத் தேடி­னர்.

ஆனால் அவன் நழுவி விட்டான்.