குழந்தை பெற்றெடுத்த சில நாள்களிலேயே தீவிரப் பிரசாரம்

குழந்தை பெற்றெடுத்த சில நாள்களிலேயே தீவிரப் பிரசாரம்

1 mins read
14b68bcc-aeea-4e76-bf60-4e55af6d6758
-

பேங்­காக்: இம்­மா­தம் 14ஆம் தேதி­யன்று தாய்­லாந்­தில் பொதுத் தேர்­தல் நடை­பெ­று­கிறது.

அந்­நாட்­டின் அடுத்த பிர­த­ம­ராக முன்­னாள் பிர­த­மர் தக்­‌ஷின் ஷின­வத்­ரா­வின் மகள் பேடோங்­டார்ன் ஷின­வத்­ரா­வுக்கு அதிக வாய்ப்­பு­கள் இருப்­ப­தாக நம்­பப்­படு­கிறது.

கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று பேங்­காக்­கில் உள்ள ஒரு மருத்துவ­ம­னை­யில் அறு­வைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற்­றெடுத்­தார் திரு­வாட்டி பேடோங்­டார்ன்.

இம்­மா­தம் 12ஆம் தேதி­யன்று நடை­பெ­றும் தமது கட்­சி­யின் பேர­ணி­யில் தாம் கலந்­து­கொள்­வது நிச்­ச­யம் என்று குழந்­தையைப் பெற்றெடுத்த இரண்டே நாள்களில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அவர் நேற்று தெரி­வித்­தார்.

தமது சக்­திக்­குத் தமது பிள்­ளை­கள்­தான் கார­ணம் என்று அவர் கூறி­னார். மருத்­து­வ­ம­னை­யில் கூடிய செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தமது ஆண் குழந்­தை­யை அவர் பெரு­மி­தத்­து­டன் காட்­டி­னார்.

அப்­போது அவ­ரது கண­வ­ரான பிடோக் சூக்­ச­வாஸ் அவ­ரு­டன் இருந்­தார்.

புதிதாகப் பிறந்த தமது ஆண் குழந்தையைச் செய்தியாளர்களிடம் காட்டும் திருவாட்டி பேடோங்டார்ன் ஷினவத்ரா. படம்: ஏஎஃப்பி