கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகில் உள்ள தாமான் செபூத்தேயில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பாதுகாவலர் ஒருவர் உயிருடன் புதையுண்டு மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நிகழ்ந்தபோது அவர் பாதுகாவலர்களுக்கான கூடத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. நிலச்சரிவு குறித்து நேற்று பின்னிரவு 12.54 மணி அளவில் தகவல் கிடைத்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப் பணித் துறை கூறியது. நிலச்சரிவு காரணமாக ஒருவர் உயிருடன் புதையுண்டதாக தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
அவரை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

