ரோம்: ஐக்கிய நாட்டு உணவு அமைப்பின் உலக விலைக் குறியீடு ஓராண்டில் முதன்முறையாக ஏப்ரலில் உயர்ந்தது.
உலகளவில் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பொருள்களைக் கண்காணிக்கும் உணவு, வேளாண் அமைப்பின் விலைக் குறியீடு, ஏப்ரலில் 127.2 புள்ளிகளாக இருந்தது. ஒப்புநோக்க, கடந்த மார்ச் மாதம் அது 126.5 புள்ளிகளாகப் பதிவானது. சர்க்கரை, இறைச்சி, அரிசி விலை அதிகரிப்பை இது பிரதிபலிப்பதாக அந்த அமைப்பு கூறியது.
"பொருளியல் மீட்சியடையும் வேளையில் தேவையும் அதிகரிக்கும். இதனால் உணவு விலைகளும் அதிகரிக்கின்றன," என்றார் ஐ.நா. உணவு அமைப்பின் தலைமைப் பொருளியல் நிபுணர் மெக்சிமோ டொரேரோ.
மார்ச் மாதத்துக்குப் பிறகு சர்க்கரை விலைக் குறியீடு 17.6 விழுக்காடு ஏற்றம் கண்டது. 2011 அக்டோபருக்குப் பிறகு இதுவே ஆக அதிக விலை.

