ஸூரிக்: கொவிட்-19 கிருமிப் பரவல் இனி பொதுச் சுகாதார அவசரநிலையாக வகைப்படுத்தப்படாது. மூன்றாண்டுகளுக்கும் மேல் நீடித்த அவசரநிலையை உலகச் சுகாதார நிறுவனம் நேற்று முன்தினம் அகற்றியது.
2019ஆம் ஆண்டிறுதியில் தலைதூக்கிய கொவிட்-19 கிருமி 2020ஆம் ஆண்டிலிருந்து உலகைத் திக்குமுக்காட வைத்தது. மில்லியன் கணக்கானோர் அதற்குப் பலியாயினர், உலகப் பொருளியல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
உலகளவில் கொவிட்-19 கிருமித்தொற்றின் பாதிப்பைக் குறைக்க தடுப்பூசிகள் பெரிதும் கைகொடுத்தன. சென்ற ஆண்டு தொடக்கத்திலிருந்து பல உலக நாடுகள் கிருமிப் பரவலை சகித்துக்கொண்டு வாழவும் பழகிக்கொண்டன.

