தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்தின் முதற்கட்ட வாக்களிப்பில் குளறுபடிகள் என புகார்

1 mins read
d0473323-f2f1-4991-8363-062c6eaf788b
-

பேங்­காக்: தாய்­லாந்­தில் முன்­கூட்டி நடத்­தப்­பட்ட வாக்­க­ளிப்­பில் குளறுபடிகள் நிகழ்ந்­தி­ருப்­ப­தாக கண்­கா­ணிப்­புக் குழு ஒன்று தெரி­வித்துள்­ளது.

அரசு சாரா அமைப்­பு­க­ளின் ஒட்­டு­மொத்த கூட்டு அமைப்­பான 'தேர்­தல் கண்­கா­ணிப்­புக்­கான மக்­கள் கட்­ட­மைப்பு' எச்­ச­ரிக்கை ஒலி எழுப்­பி­ய­தைத் தொடர்ந்து தேர்­தல் ஆணை­யம் சர்ச்­சை­யில் சிக்­கும் நிலை ஏற்­பட்டுள்­ளது.

ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற முதற்கட்ட வாக்­க­ளிப்­பின்­போது வாக்­கா­ளர்­க­ளின் பெயர் விடு­பட்டு இருந்­த­தா­க­வும் வாக்­க­ளிக்க வேண்­டி­ய­வர்­க­ளின் பெய­ரில் மற்­ற­வர்­கள் வாக்­க­ளித்­த­தா­க­வும் தபால் வாக்­குச்­சீட்­டு­களில் பிழை­கள் இருப்­ப­தா­க­வும் கிட்­டத்­தட்ட 300 புகார்­கள் தனக்கு வந்­தி­ருப்­ப­தாக அந்த அமைப்பு நேற்று கூறி­யது.

மேலும், வாக்­க­ளிப்பு நிலை­யங்­களில் வேட்­பா­ளர்­க­ளின் பெயர்­கள் முழு அள­வில் இல்லை என்று புகார்­கள் வந்­தி­ருப்­ப­தா­க­வும் அது தெரி­வித்­தது. வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை தாய்­லாந்­தில் பொதுத் தேர்­தல் நடை­பெற உள்­ளது. மக்­கள் எதிர்த்­த­ரப்­புக்கு ஆத­ரவு தெரி­விக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

அதன் கார­ண­மாக, 2014ஆம் ஆண்டு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அர­சாங்­கத்­தைக் கவிழ்த்­து­விட்டு ஆட்­சிப் பொறுப்­பைக் கைப்­பற்­றிய ராணு­வத்­தின் எட்டு ஆண்டு கால நிர்­வா­கம் ஒரு முடி­வுக்­கு வரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வாக்­க­ளிக்­கத் தகு­தி­ பெற்­றோ­ரில் சுமார் 2 மில்­லி­யன் பேர் நேற்று முன்­தி­னம் முதற்­கட்ட வாக்­க­ளிப்­புக்­குத் தகுதி பெற்று இருந்­த­னர்.

வாக்­க­ளிப்­பின்­போது ஏற்­பட்ட தவ­று­கள் குறித்து தனக்கு 92 புகார்­கள் வந்­தி­ருப்­ப­தாக தாய்­லாந்து தேர்­தல் ஆணை­யம் தெரி­வித்துள்­ளது.

வரும் 14ஆம் தேதி நடை­பெற இருக்­கும் வாக்­க­ளிப்­பின்­போது இந்­தத் தவ­று­கள் மீண்டும் நிக­ழாது என்று ஆணை­யம் உறுதி அளித்­துள்­ளது.