வாஷிங்டன்: எண்ணெய், எரிவாயு, நிலக்கரி உற்பத்தி அல்லாத எரிபொருள் கழிவு வெளியேற்றத்தை படிப்படியாகக் குறைக்க நாடுகள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய அரபு சிற்றரசுகள் அறைகூவல் விடுத்துள்ளது. இவ்வாண்டு டிசம்பரில் ஐநாவின் பருவநிலை மாநாடு ஐக்கிய அரபு சிற்றர சுகளில் நடைபெறுகிறது.
'காப்28' எனும் அந்தப் பருவநிலை மாற்று மாநாட்டில் உலகம் வெப்பமயமாவதற்கு எதிராகப் போராடுவது குறித்து நாடுகள் விவாதிக்க விருக்கின்றன. சில பணக்கார நாடுகள் படிம எரிபொருளைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஐக்கிய அரபு சிற்றர சுகளின் கருத்து இதற்கு எதிர்மாறாக உள்ளது. மாற்று எரிபொருளுக்கு உலகம் தயாராக வில்லை என்று அது கூறியுள்ளது. இதனால் கரிமக் கழிவைக் குறைக்கும் விவகாரத்தில் நாடு களுக்கு இடையே முரண்பாடு நிலவுகிறது.

