தாய்லாந்து தம்பதிக்கு தலா 12,640 ஆண்டு சிறை

தாய்லாந்து தம்பதிக்கு தலா 12,640 ஆண்டு சிறை

1 mins read
50b3efcf-218a-41cc-98f0-38a5aae5466b
-

பேங்­காக்: தாய்­லாந்­தில் ஆயிரக்­க­ணக்­கா­ன­வர்­களை ஏமாற்றி மோச­டி­யில் ஈடு­பட்ட தம்­ப­திக்கு நேற்று தலா 12,640 ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

ஆனால் அவர்­கள் குற்றத்தை ஒப்­புக்கொண்­ட­தால் 5,056 ஆண்­டு­க­ளுக்கு சிறைத் தண்­டனை குறைக்­கப்­பட்­டது. இருந்தாலும் வந்­தானி டிப்­பா­வேத்­தும் அவ­ரது கண­வர் மேதி சின்­பா­வும் (படம்) இரு­பது ஆண்­டு­கள் மட்­டுமே சிறைத் தண்­ட­னையை அனு­ப­விப்­பார்­கள் என எதிர்­பார்க்­கப் ப­டு­கிறது. அந்­நாட்­டில் அதிக­பட்ச சிறைத் தண்­டனை இரு­பது ஆண்­டு­க­ளாக உள்ளதே அதற்கு கார­ணம். தம்­ப­தி­யி­னர் ஏழு பேரு­டன் சேர்ந்து தங்­க­ளு­டைய சேமிப்­புத் திட்­டத்­தில் முதலீடு செய்­தால் 93% லாபம் கிடைக்­கும் என்று கூறி 2019ஆம் ஆண்டு மார்ச் முதல் அக்­டோ­பர் வரை­யில் ஃபேஸ்புக் மூல­மாக பல­ரைச் சேர்த்­துள்­ள­னர். இவர்­க­ளது மோசடி திட்­டத்­தில் மொத்­தம் 2,533 பேர் 1.3 பில்­லி­யன் பாட் (S$51.3 மில்­லி­யன்) முத­லீடு செய்­த­னர்.