வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன், சீன அரசதந்திரி வாங் யி இருவரும் வியன்னாவில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
நேர்மையான, ஆக்ககரமான முறையில் பேச்சு நடத்த அவர்கள் சந்தித்ததாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்வாண்டுத் தொடக்கத்தில் உளவு பலூன் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டதற்குப் பிறகு இத்தகைய உயர்நிலைப் பேச்சு நடைபெற்றது இதுவே முதல்முறை.
புதன்கிழமையும் வியாழக்கிழமையும் இடம்பெற்ற சந்திப்பில் இருதரப்பு உறவு, உலக அளவிலும் வட்டாரத்திலும் நிலவும் பாதுகாப்புப் பிரச்சினைகள் ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான போர் போன்றவை குறித்து பேசப்பட்டதாகத் தெரிகிறது.

