தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊழலால் ஏற்பட்டுள்ள இழப்புகள்; விசாரணை நடத்த அன்வார் உத்தரவு

1 mins read
4c5ce891-5415-4853-81d3-67a5e5306e4a
-

கோலா­லம்­பூர்: ஊழல் குற்­றங்­கள் கார­ண­மாக மலே­சி­யா­வுக்கு ஏற்­பட்­டுள்ள இழப்பு குறித்து விசா­ரணை நடத்த மலே­சிய ஊழல் தடுப்பு ஆணை­யம் உட்­பட நாட்­டின் பல்­வேறு அம­லாக்­கப் பிரி­வு­க­ளுக்கு மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் உத்­த­ர­விட்டுள்­ளார்.

ஊழ­லில் ஈடு­படுவோர், ரக­சியத் தக­வல்­க­ளைக் கசி­ய­வி­டு­வோர் குறித்து விசா­ரணை நடத்தி அவர்­க­ளைக் கண்­டு­பிடிக்­கு­மாறு மலே­சி­யக் காவல்­து­றைக்­கும் அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

கடந்த 26 ஆண்­டு­களில் மலே­சியா 4.5 டிரில்­லி­யன் ரிங்­கிட் இழந்­துள்­ள­தாக இஎம்­ஐ­ஆர் ஆய்­வில் தெரி­ய­வந்­ததை அடுத்து இது­கு­றித்து தீவிர விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும் என்­றும் பேங்க் நெகாரா மலே­சி­யா­வி­ட­மும் மலே­சிய உள்­நாட்டு வரு­வாய் துறை­யி­ட­மும் திரு அன்­வார் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

ஊழ­லுக்கு எதி­ராக திரு அன்­வார் பல­முறை போர் முரசு கொட்டி­யுள்­ளார்.

ஊழல் கார­ண­மாக மலே­சி­யா­வுக்கு நினைத்­துப் பார்க்க முடி­யாத, மாபெ­ரும் இழப்பு ஏற்

பட்­டுள்­ள­தாக அவர் கூறி­னார்.

"ஊழல் கார­ண­மாக மலே­சி­யா­வுக்­குத் எவ்­வ­ளவு இழப்பு ஏற்­பட்­டுள்­ளது என்று என்­னால் இப்­போ­தைக்­குத் துல்­லி­ய­மாகச் சொல்ல முடி­ய­வில்லை. ஆனால் அந்­தத் தொகை பல பில்­லி­யன் ரிங்­கிட் பெறு­மா­ன­முள்­ளது என்று என்­னால் கூற முடி­யும்.

"இந்த ஊழல்­க­ளுக்கு யார் கார­ணம் என்று கண்­டு­பி­டிக்க நான் எடுக்­கும் நட­வ­டிக்­கை­களைத் தடுக்­க­வும் என்­னைத் தாக்­க­வும் முயற்சி செய்­கின்­ற­னர், குறிப்பாக செல்வந்தர்கள் என்று திரு அன்­வார் தெரி­வித்­தார்.