லாகூர்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பிணையில் விடுவிக்கப்பட்டார். லாகூரில் உள்ள தமது வீட்டை இம்ரான் கான் நேற்று சென்றடைந்தார்.
அண்மையில் அவர் நீதிமன்றத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார்.
அவர் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி அதிகாரிகள் அவரைத் தடுத்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, இம்ரான் கானின் கட்சியினர் நாடெங்கும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இம்ரான் கானை எந்த வழக்கு தொடர்பாகவும் வரும் திங்கட்கிழமைக்கு முன்பு கைது செய்யக்கூடாது என்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இம்ரான் கான் தமது பிரதமர் பதவியை இழந்ததிலிருந்து அவர் மீது பல குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக வைக்கப்படுகின்றன.
"பாகிஸ்தானிலேயே ஆகப் பெரிய கட்சியின் தலைவரான நான், உயர் நீதிமன்ற வளாகத்திலிருந்து அனைவரின் கண் முன் கடத்தப்பட்டேன்.
"என்னை அதிகாரிகள் பயங்கரவாதியைப் போல நடத்தினர். அதிகாரிகளின் இந்த முறையற்ற செயலை எதிர்த்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்று பிணையில் விடுவிக்கப்பட்டதும் பிறகு ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் இம்ரான் கான் அதிருப்திக் குரல் எழுப்பினார்.

