'ஒரு காலத்தில் எதிரிகள், இப்போது நண்பர்கள்'

1 mins read
ca60b55a-6d79-40fc-9673-813043d3a18b
-

கோலா­லம்­பூர்: நாட்­டின் 15வது பொதுத் தேர்­த­லுக்­குப் பிறகு ஐக்­கிய அர­சாங்­கத்­தில் இடம்­பெற்­றுள்ள அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு இடை­யி­லான போட்டி முடி­வுக்கு வந்­து­விட்­டது என்று மலே­சிய சீனர் சங்­கத்­தின் தலை­வர் டாக்­டர் வீ கா சியோங் நேற்று தெரி­வித்­தார்.

"தற்போது நாட்டை முன்­னெ­டுத்து செல்­வதே முக்கியம்," என்று உலக வர்த்தக நிலையத் தில் நடைபெற்ற ஐக்­கிய அர­சாங்­கத்­தின் மாநாட்­டில் அவர் வலி­யு­றுத்­தி­னார். அர­சி­யல் கட்­சி­கள் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கி­ய­தாக இருக்க வேண்­டும். நாட்­டுக்­குத் தீங்கு விளை­விக்­கும் அர­சி­யல்­களை நிறுத்த வேண்­டும். தற்­போ­தைய அர­சி­யல் 90களி­லி­ருந்து மாறு­பட்­டது. அர­சி­யல் கட்­சி­யின் அடை­யா­ளம் மட்­டும் பார்க்­கப்­ப­டு­வ­தில்லை என்ற வீ கா சியோங், ஒரு காலத்­தில் எதி­ரி­க­ளாக இருந்­த­வர்­கள் தற்­போது நண்­பர்­க­ளா­கி­விட்­ட­னர் என்று பெருத்த ஆர­வா­ரங்­க­ளுக்கு இடையே தெரி­வித்­தார். மலே­சி­யா­வில் அனைத்து இனங் களுக்கு இடையே நெருக்­க­மான உறவை உரு­வாக்­கு­வது முக்­கி­யம் என்­றும் அவர் சொன்­னார். "பிர­த­மர் அன்­வார் இப்­ரா­ஹி­முக்கு மக்­கள் மற்­றும் 19 கட்­சி­க­ளின் உறு­தி­யான ஆத­ரவு இருப்­ப­தால், அவர் தொடர்ந்து முன்­னே­றிச் செல்ல வேண்­டும்," என்று அஹ்­மட் ஸாஹிட் ஹமிடி தெரி­வித்­தார்.