வெளிநாட்டு ஊழியர்களிடம் வேலை மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள்மீது நடவடிக்கை

வெளிநாட்டு ஊழியர்களிடம் வேலை மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள்மீது நடவடிக்கை

2 mins read
92adfcf9-79b4-4ae1-a579-1e8004327c41
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் சில ஆட்­சேர்ப்பு நிறு­வ­னங்­கள் வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலைக்கு எடுத்து பின்­னர் அவர்­கள் வேலை­யின்­றித் தவிக்க நேரி­டும் சம்­ப­வங்­கள் தொடர்­பில் அந்­நாட்டு அர­சாங்­கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

அத்­த­கைய ஆட்­சேர்ப்பு நிறு­வ­னங்­கள்­மீது தடை விதிக்­கப்­படும் என்­றும் அவற்­றின் ஆட்­சேர்ப்பு உரி­மம் ரத்து செய்­யப்­படும் என்­றும் மலே­சிய அர­சாங்­கம் நேற்று அறி­வித்­தது.

தெற்­கா­சிய நாடு­க­ளைச் சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கான குடி­யே­றி­கள் மலே­சி­யா­வில் வேலை­யின்­றித் தவிப்­ப­தாக ராய்ட்­டர்ஸ் நிறு­வ­னம் சென்ற வாரம் தக­வல் வெளி­யிட்­டி­ருந்­தது. அவர்­களில் பெரும்­பா­லோர் பங்­ளா­தே­ஷை­யும் நேப்­பா­ளத்­தை­யும் சேர்ந்­த­வர்­கள்.

அதி­க­மான தொகையை ஆட்­சேர்ப்­புக் கட்­ட­ண­மா­கச் செலுத்­திய அவர்­கள் மலே­சிய மண்ணை மிதித்த பிறகே உறுதி­கூ­றப்­பட்­ட­து­போல வேலை­யில் சேர இய­லாது என்று தெரிந்­து­கொண்­ட­னர்.

அத்­த­கைய சம்­ப­வங்­கள் தொடர்­பில் சென்ற மாதம் விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட்­டது மலே­சிய அர­சாங்­கம்.

ராய்ட்­டர்ஸ் நிறு­வ­னத்­தின் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்த மலே­சி­யத் தொழி­லா­ளர் துறை, சம்­பந்­தப்­பட்ட ஆட்­சேர்ப்பு நிறு­வனங்­கள்­மீது நட­வ­டிக்கை எடுக்க உறு­தி­ய­ளித்­தது.

முழு­மை­யான விசா­ரணை நடத்­தப்­படும். சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­கள் எது­வும் சகித்­துக்­கொள்­ளப்­படமாட்டா என்­று மின்­னஞ்­சல் மூலம் அது தெரிவித்தது.

மோச­டி­யில் சிக்­கித் தவிக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­களில் சிலரை அர­சாங்க வசிப்­பி­டங்­களில் தங்க வைத்­தி­ருப்­ப­தா­க­வும் அவர்­க­ளின் தங்­கு­மி­டச் செல­வை­யும் சம்­ப­ளத்­தை­யும் வழங்­கும்­படி சில நிறு­வ­னங்­களுக்கு உத்­த­ர­விட்­டி­ருப்­ப­தா­க­வும் மலே­சி­யத் தொழி­லா­ளர் துறை குறிப்பிட்டது.

தங்­கு­மி­டங்­களில் நேப்­பாள ஊழி­யர்­கள் இரு­வர் உயிரை மாய்த்­துக்­கொண்­ட­தாக வெளி­யான தக­வல்­களை தொழி­லா­ளர் துறை மறுத்­தது. வேலை மோசடி தொடர்­பில் மலே­சி­யா­வுக்கு விசா­ரிக்­கச் சென்ற நேப்­பாள ஆட்­சேர்ப்பு முக­வர் ஒரு­வர் உயி­ரி­ழந்­த­தா­கக் காவல்­துறையை மேற்­கோள்­காட்டி அது குறிப்­பிட்­டது. அதுகுறித்த விசாரணை தொடர்கிறது.