பேங்காக்: சமூக ஊடகங்கள் வழியாக விளைவுகளை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற மூவ் ஃபார்வர்ட் கட்சியை தாய்லாந்தின் செல்வாக்குமிக்க முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா பாராட்டியுள்ளார்.
பல ஆண்டு குழப்பத்திற்கு காரணமான வயதான ராணுவத் தளபதிகள் கௌரவமாக ஓய்வு பெற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடோடியாக அவர் வெளிநாட்டில் இருந்தாலும் நாட்டின் முக்கிய பியூ தாய் கட்சியின் பின்னணியில் அவரது குடும்பம் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் சமூக ஊடங்கள் மூலம் வெற்றியைச் சாதித்த மூவ் ஃபார்வர்ட் கட்சியை தக்சின் பாராட்டியிருக்கிறார்.
சமூக ஊடகங்கள் மற்றும் பயனாளர் உருவாக்கிய உள்ளடக்கம் மூலம் வெற்றி பெற முடியும் என்பதை மூவ் ஃபார்வர்ட் கட்சி நிரூபித்துள்ளது என்றார் அவர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலுக்கு முன்பு வரை மூன்று முறை ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாலும் 2001ஆம் ஆண்டிலிருந்து தக்சின் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளது. இம்முறை மூவ் ஃபார்வர்ட் கட்சி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.
"மக்கள் வாக்கை கைப்பற்று வதற்காக அதிக வளங்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை. பயனாளர் உருவாக்கிய உள்ள டக்கம், இளையர்கள் அதிகம் பயன்படுத்தும் டிக்டாக்கை மூவ் ஃபார்வர்ட் கட்சி பயன்படுத்தி வாகை சூடியிருக்கிறது," என்று இணையம் வழியாக நடைபெற்ற இரண்டு மணி நேர அரசியல் கலந்துரையாடலில் அவர் தெரிவித்தார். பல்கலைக்கழக நகரங்களில் தனது கோரிக்கையை 'மூவ் ஃபார்வர்ட்' கட்சி வலுவாக முன் வைத்திருந்தது. சமூக ஊடகப் பிரசாரங்களில் ஈர்க்கப் பட்டபல இளையர்கள் அக்கட்சிக்கு வாக்களிக்க தங்கள் பெற்றோரையும் சம்மதிக்க வைத்தனர் என்று தக்சின் குறிப்பிட்டார்.

