ஜி-7; பாதுகாப்பை பலப்படுத்தும் ஜப்பான்

ஜி-7; பாதுகாப்பை பலப்படுத்தும் ஜப்பான்

1 mins read
7b197935-0ebe-46b7-8bcb-e718db81e65f
-

ஹிரோ­ஷிமா: ஜப்­பா­னில் முன்­னாள் பிர­த­ம­ரும் இந்­நாள் பிர­த­ம­ரும் தாக்­கப்­பட்­ட­தால் ஜி-7 மாநாட்­டின் பாது­காப்பை அந்­நாட்­டின் அர­சாங்­கம் வலுப்­ப­டுத்­தி­ வருகிறது.

கடந்த ஏப்­ரல் மாதம் தற்­போ­தைய பிர­த­மர் ஃபியுமியோ கிஷிடா தாக்­கப்­பட்­டார்.

ஆனால் அவர் அந்­தத் தாக்கு­தலி­லி­ருந்து அதிர்ஷ்­ட­வச­மாக உயிர் தப்­பி­னார். இதற்கு முன்பு முன்­னாள் பிர­த­மர் ஷின்சோ அபேயை பொதுக்­கூட்­டத்­தில் பேசி­ய­போது ஒரு­வர் துப்­பாக்­கி­யால் சுட்­ட­தால் அவர் கொல்­லப்­பட்­டார்.

இந்த நிலை­யில் ஜி-7 மாநாட்­டில் பல தலை­வர்­கள் கலந்­து­கொள்­ள­வி­ருப்­ப­தால் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது.

மாநாட்­டின்­போது ஷிரோ­ஷிமா நக­ரில் ஏறக்­கு­றைய 24,000 பாது­காப்­புப் படை வீரர்­கள் நிறுத்­தப்­ப­ட­வி­ருக்­கின்­ற­னர்.

நாட்­டின் இதர பகு­தி­க­ளி­லி­ருந்து இதற்­காக வீரர்கள் திரட்டப்­ ப­டு­கின்­ற­னர்.

மே 19 முதல் 21 வரை நடை­பெ­றும் ஜி-7 பேச்­சு­வார்த்­தைக்கு முன்ன­தாக மேற்கு நக­ரத்­தின் புகழ்­பெற்ற அமை­திப் பூங்­கா­வில் காவல்­து­றை­யி­னர் சுற்­றுக் காவல் பணி­யைத் தொடங்­கி­யுள்­ள­னர்.

அணு­வா­யு­தக் குண்டு மாடம் வழி­யாக ஓடும் ஆற்­றோ­ரங்­க­ளி­லும் பாது­காப்புப் படை வீரர்­கள் நிறுத்­தப்­பட்­டுள்­ள­னர். ஹெலி­காப்­டர் தொடர்ந்து வானத்­தில் சுற்றி வரு­கிறது.

தலை­ந­கர் தோக்­கியோ மட்­டு­மல்­லா­மல் நக­ரத்­துக்கு வெளி­யே­யும் பாது­காப்பு விரி­வு­ப­டுத்­தப்­பட்டுள்­ளது.

மாநாட்­டின் உயர் பாது­காப்பு குறித்து ரயில்வே நிலைய தக­வல் பல­கை­க­ளி­லும் எச்­ச­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

ஜப்­பா­னின் பெரிய நகரங்­களில் உள்ள பொது இடங்­களில் குப்­பைத் தொட்­டி­கள் வைக்­கப் ­ப­டு­வ­தில்லை.

இந்த நிலை­யில் ஆபத்தை ஏற்­ப­டுத்­தம் சாத்­தி­ய­மான இடங்­களைப் பாது­காப்­புப் படை­யி­னர் மூடி வரு­கின்­ற­னர்.