சிகிச்சை மறுப்பு; சிறுவன் மரணம்

சிகிச்சை மறுப்பு; சிறுவன் மரணம்

1 mins read
58ccfbaf-6f4b-4b5a-8ff1-efdd75a60f29
-

சோல்: தென்­கொ­ரி­யா­வில் சிகிச்­சை­ய­ளிக்க நான்கு மருத்­து­வ­ம­னை­கள் மறுத்­த­தால் ஐந்து வயது சிறு­வன் மர­ண­ம­டைந்­தான். மே 6ஆம் கடு­மை­யான சுவா­சப் பிரச்­சி­னை­க­ளு­டன் சிறு­வன் சோலில் உள்ள மருத்­து­­ம­னை­யின் அவ­சர சிகிச்­சைப் பிரி­வுக்குக் கொண்டு செல்லப்பட்டான். ஆனால் படுக்கை வசதி இல்­லா­த­­தால் அவனை சேர்த்­துக் கொள்ள மருத்­து­வ­மனை மறுத்­து­விட்­டது. இதர நான்கு மருத்­து­வ­ம­னை­களும் பல்­வேறு கார­ணங்­க­ளைக் கூறி சிறு­வனை ஏற்­றுக்­கொள்ள மறுத்துவிட்­டன. ஐந்­தா­வது மருத்­து­வ­மனை அவனை வெளி­நோ­யா­ளி­யாக சிகிச்சை அளித்து வீட்­டுக்கு அனுப்­பி­விட்­டது. ஆனால் சுவாசப் பிரச்­சினை மோச­ம­டைந்­த­தால் பெற்­றோர் அரு­கில் உள்ள அவ­சர சிகிச்­சைக்­குப் பிரி­வுக்குக் கொண்டு செல்வதற்குள் இறந்துவிட்டான்.