இம்ரான் கான்: எப்போதும் நான் கைது செய்யப்படலாம்

இம்ரான் கான்: எப்போதும் நான் கைது செய்யப்படலாம்

2 mins read
97d23945-18ff-4ea3-9e60-27e3c0acdd2f
-

லாகூர்: பாகிஸ்­தா­னின் முன்­னாள் பிர­த­மர் இம்­ரான் கான், தான் மீண்­டும் கைது­செய்­யப்­ப­டக் கூடும் என்று தெரி­வித்­துள்­ளார். தன் வீட்­டைச் சுற்­றி­லும் ஏரா­ள­மான காவல்­து­றை­யி­ன­ரு­டன் பர­ப­ரப்­பான சூழல் காணப்­ப­டு­கிறது. எனவே, எந்த நேரத்­தி­லும் நான் கைது­செய்­யப்­ப­ட­லாம் என்றே கரு­து­கி­றேன்.

"நான் கைது­செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்பு டுவிட்­ட­ரில் பதி­வி­டும் இந்­தப் பதிவே கடை­சிப் பதி­வாக இருக்­கும்," என்று அவர் தனது டுவிட்­ட­ரில் நேற்று பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்­தா­னின் பஞ்­சாப் மாநில அர­சு, இம்­ரான் கானுக்கு 24 மணி நேரம் கெடு விதித்­தி­ருந்­தது. அதா­வது இம்­ரான் கானின் வீட்­டில் இருக்­கும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் அனை­வ­ரும் காவல்­துறை­யி­டம் சரண் அடைய வேண்­டும்.

இல்­லை­யெ­னில், அர­சாங்­கத்­தின் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை அவர்­கள் எதிர்­நோக்­கக்­கூடும் என்று தக­வல் துறை அமைச்­சர் அமிர் மிர், செய்­தி­யா­ளர்­கள் கூட்­டம் ஒன்­றில் தெரி­வித்­தி­ருந்­தார்.

ஊழல் வழக்கு ஒன்­றில் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­கச் சென்­று­கொண்­டி­ருந்த இம்­ரான் கானை சுற்றி வளைத்து பாகிஸ்­தான் ராணு­வத்­தி­னர் கைது செய்­த­னர்.

பாகிஸ்­தா­னின் முன்­னாள் கிரிக்­கெட் வீர­ரு­மான திரு இம்­ரான் கான், கடந்த வாரம் இஸ்­லா­மா­பாத்­தில் கைது­செய்­யப்­பட்­டார். அவர் கைது செய்­யப்­பட்­டது சட்­டத்­திற்­குப் புறம்­பா­னது என அவரை அதே வாரம் விடு­தலை செய்­யும்­படி அங்­குள்ள உச்ச நீதி­மன்­றம் ஆணை­யிட்­டது. அதன்­படி அவர் விடு­விக்­கப்­பட்­டார்.

அவர் கைது­செய்­யப்­பட்டு தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்­த­போது நாடு முழு­தும் உள்ள அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் போராட்­டங்­க­ளி­லும் வன்­மு­றை­க­ளி­லும் ஈடு­பட்­ட­னர். பாது­காப்­புப் படை­யி­ன­ருக்­கும் இம்­ரான் கானின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்­கும் இடையே ஏற்­பட்ட கல­வ­ரத்­தில் குறைந்­தது 8 பேர் கொல்­லப்­பட்­ட­னர். நூற்­றுக்­க­ணக்­கா­னோர் படு­கா­ய­ம­டைந்து மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

அந்­தக் கல­வ­ரத்­தில், ராணு­வத் தள­ப­தி­யின் அதி­கா­ர­பூர்வ மாளிகை உள்­ளிட்ட ராணு­வத்­திற்­குச்­சொந்­த­மான சொத்­து­க­ளைத் தீக்­கி­ரை­யாக்­கி­னர்.

ராணு­வச் சொத்­து­க­ளைச் சேதப்­ப­டுத்­திய கல­வ­ரக்­கா­ரர்­க­ளின் மீது ராணு­வச் சட்­டத்­தின்­படி கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும் என்று ராணுவம் எச்­ச­ரித்­தது. அதற்­குப் பின், இம்­ரான் கானின் ஆத­ர­வா­ளர்­கள் ஆயி­ரக்­க­ணக்­கா­னோரை ராணு­வத்­தி­னர் பிடித்­துச் சென்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது. "ராணு­வச் சொத்­து­க­ளைச் சேதப்­ப­டுத்­தி­ய­வர்­களில் 30 முதல் 40 பேர் வரை ஈடு­பட்­டி­ருக்­க­லாம். அவர்­கள் உட­ன­டி­யாக ராணுவத்திடம் சர­ண­டைய வேண்­டும். இந்த உத்­த­ரவை மீறும் பட்­சத்­தில் அவர்­கள் மீது கடு­மை­யான சட்­டம் பாயும்," என்று மாநில அமைச்­சர் மிர் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.