இத்தாலி வெள்ளம்: மரண எண்ணிக்கை 13ஆக உயர்வு

இத்தாலி வெள்ளம்: மரண எண்ணிக்கை 13ஆக உயர்வு

1 mins read
b55ce39a-7fd7-492a-93da-982424e61421
-

லுகோ: இத்­தா­லி­யின் வட­கிழக்குப் பகு­தியை வாட்டி வதைத்­து­வரும் வெள்­ளத்­தில் குறைந்­தது 13 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக அந்­நாட்டு ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன. ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் தங்­க­ளின் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற வேண்­டிய நிலை ஏற்­பட்­டு உள்­ள­து­டன் வெள்­ளத்­தால் பயிர்­களும் நாச­ம­டைந்­த­தாக அறி­யப்­ப­டு­கிறது.

உயி­ரி­ழந்­த­வர்­களில் தங்­க­ளின் 70களில் உள்ள இரு விவ­சா­யி­களும் அடங்­குவர் என்­றும் அவர்­கள் உட­லில் மின்­சா­ரம் பாய்ந்து உயிர் போனது என்­றும் கூறப்­ப­டு­கிறது.

தங்­க­ளின் வீடு­களை விட்டு கிட்­டத்­தட்ட 10,000 பேர் வெளி­யே­றி­யதை அடுத்து வெள்ள அபா­யத்­தில் இருக்­கும் மேலும் மூன்று கிரா­மங்­க­ளி­லி­ருந்து மக்கள் வெளி­யே­று­மாறு அதி­காரி­கள் உட­னடி ஆணை ஒன்­றைப் பிறப்­பித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே, மின்­சா­ரம் ஆங்­காங்கே பழை­ய­படி வந்­து­விட்­டா­லும் இன்­ன­மும் 27,000 பேர் இருட்­டில் தவிப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இந்­நி­லை­யில் 400 சாலை­களும் சேத­ம­டைந்­து உள்­ள­தாக அறி­யப்­ப­டு­கிறது.