நியூசிலாந்து விடுதியில் தீ: ஆடவர்மீது குற்றச்சாட்டு

நியூசிலாந்து விடுதியில் தீ: ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
5ea3fbcc-7403-40d1-814b-40f72a639dc0
-

வெலிங்­டன்: நியூ­சி­லாந்­தில் உள்ள தங்­கு­வி­டுதி ஒன்­றுக்­குத் தீவைத்­த­தா­கக் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட 48 வயது ஆட­வர் ஒரு­வர், வேறொ­ரு­வரே தீயை மூட்­டி­ய­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­து உள்­ளார். அந்­தச் சம்­ப­வத்­தில் குறைந்­தது ஐந்து பேர் உயி­ரி­ழந்­த­னர்.

வழக்கு விசா­ர­ணை­யின்­போது, தமக்­குப் பிணை வழங்க வேண்­டும் என்­றும் நல்ல வழக்­கறி­ஞர் வேண்­டும் என்­றும் உரக்கக் கூறிய அவர், வேறொருவர் தீயை மூட்­டி­ய­தா­கச் சொன்­னார்.

தீ மூட்­டி­ய­தன் தொடர்­பில் அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர்­கள் அவர்­மீது இரண்டு குற்­றச்­சாட்டு­க­ளைச் சுமத்­தி­னர். கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அதி­கா­லை­யில், 'லோஃபர்ஸ் லாட்ஜ்' எனும் அந்த நான்கு மாடி விடு­திக்­குத் தீவைத்­தது ஒரு குற்­றச்­சாட்டு. முன்­ன­தாக, அக்­கட்­ட­டத்­தில் உள்ள இருக்­கையை எரித்­தது மற்­றொரு குற்­றச்­சாட்டு.

நீதி­மன்­றத்­தில் அந்த ஆட­வரின் பெயர் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. அவர் தற்­போது தடுப்புக்­கா­வ­லில் வைக்­கப்­பட்­டு உள்ளார்.

தீச்­சம்­ப­வம் தொடர்­பில் வேறு யாரை­யும் தாங்­கள் தேடவில்லை என்று காவல்­துறை­ தரப்பில் தெரி­விக்கப்பட்டு உள்­ள­து.