குழந்தையைப் பட்டினி போட்டு கொன்ற தம்பதிக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை

2 mins read
bee535a3-c7b1-4b62-91a7-c14f5a83378a
-

சோல்: இரண்டு வய­துக் குழந்தையைப் பட்­டினி போட்டு கொன்ற தம்­ப­திக்கு விதிக்­கப்­பட்ட 30 ஆண்­டு சிறைத் தண்­ட­னையை தென்­கொ­ரிய உச்ச நீதி­மன்­றம் உறு­திப்­ப­டுத்­தி­ உள்ளது.

இந்த வழக்­கில் கீழ் நீதி­மன்­றம் ஏற்­கெ­னவே அளித்­தி­ருந்த தீர்ப்பை உச்ச நீதி­மன்­றம் உறுதி செய்துள்­ள­தாக உள்­ளூர் ஊட­கங்­கள் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தன.

2021 அக்­டோ­ப­ரில் இருந்து 2022 மார்ச் வரை அந்­தக் குழந்­தை­யை­யும் அதன் 17 மாதச் சகோ­த­ர­ரை­யும் நிரா­க­ரித்­த­தாக அந்த 22 வயது மாது மற்­றும் அவ­ரின் 29 வயது கண­வர்­மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்டு இருந்­தது.

கடும் ஊட்­டச்­சத்து குறை­பாடு, மூளை­யில் ரத்­தக்­க­சிவு கார­ண­மாக 2022 மார்ச் மாதம் அச்­சி­றுமி உயி­ரி­ழந்­தாள்.

அப்­போது, நாயின் மலத்­தை­யும் அதன் உண­வை­யும் சாப்­பிட்ட அச்­சி­றுமி தரை­யில் விழுந்து கிடந்­த­தைக் கண்­டும் அவ­ளின் வளர்ப்புத் தந்தை ஒன்றுமே செய்­ய­வில்லை.

மேலும், குப்­பைக் கூளத்­தில் உண­வைத் தேடிய அச்­சி­று­மியை அந்த ஆட­வர் உடல் ரீதி­யாக துன்­பு­றுத்­தி­ய­தா­க­வும் கண்­ட­றி­யப்­பட்­டது.

அச்­சி­று­மி­யின் வய­து­டைய சிறு­வர்­க­ளின் சரா­சரி எடை­யு­டன் ஒப்­பி­டு­கை­யில், அச்­சி­று­மி­யின் எடை பாதி­ய­ளவு மட்­டுமே இருந்தது. அவ­ளது செரி­மான மண்­ட­லத்­தில் ஒரு துண்டு கேரட் மட்டுமே இருந்­தது பிரே­தப் பரிசோ­த­னை­யில் கண்­ட­றி­யப்­பட்டது.

அச்­சி­றுமி இறப்­ப­தற்கு சுமார் இரண்டு வாரங்­க­ளுக்கு முன்பே அத்­தம்­ப­தி­யர் அவளை முற்­றி­லு­மாக பட்­டினி போட்­டு­விட்­டது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.

அத்­தம்­ப­திக்கு மாதந்­தோ­றும் 350,000 வோன் ($355) அர­சாங்க உத­வி­யும் அச்­சி­று­மி­யின் சொந்த தந்­தை­யி­டம் இருந்து 400,000 வோன் பண­மும் கிடைத்­தது.

பட்­டினி போடப்­பட்­ட­தில் அச்சிறு­மி­யின் சகோ­த­ர­ருக்­கும் கடும் ஊட்­டச்­சத்து குறை­பாடு ஏற்­பட்­டது. அத்­தம்­ப­தி­ய­ரால் அவனும் கொடு­மைப்­ப­டுத்­தப்­பட்­டான்.