நூறாண்டுகளில் மிக மோசமான வெள்ளத்தில் இருந்து மீண்டுவரும் இத்தாலிக்கு உதவி

நூறாண்டுகளில் மிக மோசமான வெள்ளத்தில் இருந்து மீண்டுவரும் இத்தாலிக்கு உதவி

1 mins read
8ce70fc8-c539-409c-bb52-f7b1d06d66bc
-

ஃபேன்ஸா: நூறாண்டுகளில் ஆக மோச­மா­ன­தா­கக் கரு­தப்­படும் வெள்­ள பாதிப்­பில் இருந்து மெல்ல மீண்­டெ­ழும் இத்­தா­லிக்கு உலக நாடு­க­ளி­ட­மி­ருந்து உதவி கிடைத்­துள்­ளது.

அங்கு வெள்­ளத்­தால் குறைந்­தது 14 பேர் உயி­ரி­ழந்­த­து­டன் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் தண்­ணீர் தேங்­கிய வீடு­களில் அல்­லது மீட்பு நிலை­யங்­களில் சிக்­கித் தவிக்­கின்­ற­னர்.

ஆறு மாதங்­கள் பெய்­யக்கூடிய மழை 36 மணி நேரத்­தில் கொட்டித் தீர்த்­த­தைத் தொடர்ந்து, வெள்­ளத்­தில் சிக்­கி­ய­வர்­களை மீட்­கும் பணி இடம்­பெற்று வரு­கிறது. இத்­தா­லி­யப் பிர­த­மர் ஜியோர்­ஜியா மெலோனி, பேரி­ட­ரால் ஏற்­பட்­டுள்ள பாதிப்­பைக் காட்­டும் புகைப்­ப­டங்­களை ஜப்­பா­னில் நடை­பெ­றும் ஜி7 உச்­ச­நிலை மாநாட்­டில் பகிர்ந்­தார்.

அதை­ய­டுத்து, இத்­தா­லிக்கு உதவ பிரெஞ்சு அதி­பர் இமானுவல் மெக்­ரோன் உறு­தி­ அளித்­துள்­ளார்.

எமி­லியா ரோமக்னா வட்­டா­ரத்­தில் தங்­க­ளது வீடு­க­ளி­லி­ருந்து 15,000க்கும் மேற்­பட்­டோர் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ள­னர். அந்த வட்டா­ரத் தலை­வர், வெள்­ளத்தை நில­ந­டுக்­கத்­தோடு ஒப்­பிட்­டு உள்ளார். இத்­தா­லி­யில் பெய்த கன­ம­ழை­யால் பல பில்­லி­யன் யூரோ மதிப்­பில் சேதம் ஏற்­பட்­டு உள்­ளது.