தென்கொரிய, ஜப்பானிய பிரதமர்கள் கூட்டு அஞ்சலி

தென்கொரிய, ஜப்பானிய பிரதமர்கள் கூட்டு அஞ்சலி

1 mins read
24bb5a13-07f4-43d7-80c9-4037358c1544
-

ஹிரோ­ஷிமா: ஜப்­பா­னிய, தென்­கொ­ரி­யத் தலை­வர்­கள் தங்­க­ளுக்கு இடை­யி­லான வேறு­பா­டு­களை மறந்து

வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க பய­ணத்­தில் ஹிரோ­ஷிமா அணு­குண்டு தாக்­கு­த­லில் கொல்­லப்­பட்ட கொரிய வீரர்­க­ளுக்கு கூட்­டாக அஞ்­சலி செலுத்­தி­யுள்­ள­னர்.

ஜப்­பா­னிய பிர­த­மர் ஃபுமியோ கிஷி­டா­வும் தென் கொரிய பிர­த­மர் யூன் சுக்-இயோ­லும் தங்­க­ளு­டைய துணை­வி­யா­ரு­டன் நினை­வி­டத்­தில் வெண்­ணிற மலர் வளை­யம் வைத்து மரி­யாதை செலுத்­தி­னர்.

ஹிரோ­ஷிமா நக­ரில் நடை­பெற்ற 'ஜி7' மாநாட்­டில் பங்­கேற்­ப­தற்­காக வந்த உறுப்­பி­னர் அல்­லாத நாடு­களில் ஒன்­றான தென்­கொ­ரியா அஞ்­சலி நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டது.

இந்த நினை­வி­டத்­திற்கு இரு நாட்டு தலை­வர்­களும் கூட்­டா­கச் செல்­வது இது முதல்­முறை. ஜப்­பா­னிய பிர­த­மர் ஒரு­வர் அவ்­வாறு அந்த நினை­வி­டத்­திற்­குச் செல்­வது இரண்­டா­வது முறை­யா­கும்.

"அணு­குண்டு தாக்­கு­த­லில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு வருத்­தம் தெரி­விக்­கும் அதே வேளை­யில் இந்­தப் பய­ணம் அமை­தி­யான எதிர்­கா­லத்­திற்கு வழி வகுக்­கும். பிர­த­மர் கிஷி­டா­வின் துணிச்­ச­லான இந்­தச் செயல் என்­றும் நினை­வு­கூ­ரப்­படும்," என்று நினை­வி­டத்­திற்­குச் சென்ற பிறகு இரு­த­ரப்பு கூட்­டத்­தில் தென்­கொ­ரிய பிர­த­மர் திரு யூன் தெரி­வித்­தார்.

தென்கொரியாவும் ஜப்பானும் அமெரிக்காவின் நட்பு நாடுகள். ஆனால் 1910 முதல் 1945 வரை கொரியாவில் ஜப்பானின் கொடுமையான ஆட்சி நடந்தது தொடர்பில் இரு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்த நிலையில் நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் இந்த நினைவு அஞ்சலியில் இரு தலைவர்களும் கூட்டாக பங்கேற்றுள்ளனர்.