ஜகார்த்தா: திமோர் லெஸ்டே வாக்காளர்கள் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக இந்தோனீசியா ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த தீமோர் லெஸ்டே 2002ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்தது.
அதன் பிறகு 5வது முறையாக அங்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 2018ஆம் ஆண்டிலிருந்து பிரதமராக இருக்கும் திரு ஜோஸ் மரியா வாஸ்கோன்செலோசை, புரட்சி முன்னணி தலைமையிலான நான்கு கட்சி கூட்டணி ஆதரிக்கிறது. இவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவது சந்தேகம் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இத்தேர்தலில் 17 கட்சிகள் எதிர்த்துப் போட்டியிடுகின்றன.
ஆனால் சுதந்திர நாயகனான ஸனானா குஸ்மாவோ தலைமையிலான திமோரி மறுசீரமைப்பு தேசிய காங்கிரசுக்கும் மாரி அல்காடிரி தலைமையிலான புரட்சி முன்னணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தேர்தலில் குஸ்மாவோ அல்லது அல்காட்டிரி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தீமோர் லெஸ்டே அண்மைய ஆண்டுகளாக எண்ணெய், எரிவாயு சார்ந்த பொருளியலிருந்து மீண்டு வர போராடி வருகிறது.

