சூடானில் ஏழு நாள் சண்டை நிறுத்தம்

சூடானில் ஏழு நாள் சண்டை நிறுத்தம்

1 mins read
ea8b32a7-6080-4ae4-ae1a-a8d9fd5aeb65
-

கெய்ரோ/துபாய்: சூடா­னின் போரில் ஈடு­பட்டு வரும் இரு பிரி­வு­களும் சனிக்­கி­ழமை பிற்­ ப­கு­தி­யில் ஏழு நாள் போர் நிறுத்­தத்­திற்­கான ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டுள்­ளன.

சூடா­னில் நடை­பெற்று வரும் போர் நாட்டை குழப்­பத்­தில் ஆழ்த்­தி­யது மட்­டு­மல்­லா­மல் ஒரு மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான மக்­கள் இடம்­பெ­யர்ந்­துள்­ள­னர்.

ஆறா­வது வார­மாக சண்டை நடை­பெற்று வரு­கிறது.

ஒப்­பந்­தத்­தின்­படி போர் நிறுத்­தம் இன்று கார்­டும் நேரப்­படி இரவு 9.45 மணிக்கு அம­லுக்கு வரும் என்று பேச்சுவார்த்­தைக்கு உத­விய அமெ­ரிக்­கா­வும் சவுதி அரே­பி­யா­வும் தெரி­வித்­துள்­ளன.

இதற்கு முன்பு செய்­யப்­பட்ட பல போர்நிறுத்த ஒப்­பந்­தங்­கள் மீறப்­பட்­டுள்­ளன.

இந்த நிலை­யில் அமெ­ரிக்க-சவுதி மற்­றும் அனைத்­து­லுக ஆத­ர­வு­டன் போர்நிறுத்­தம் கண்­கா­ணிக்­கப்­படும்.

ஆனால் எந்த வகையில் கண்காணிப்பு நடவடிக்கை இடம்பெறும் என்பது தெரிய வில்லை.