ஜோகூர் பாரு: நாய்க்குத் தீ வைத்த குற்றத்தை ஒப்புக் கொண்ட இளையருக்கு உயர் நீதிமன்றம் பிரம்படி தண்டனையிலிந்து விலக்கு அளித்துள்ளது.
ஏப்ரல் 19ஆம் தேதி 18 வயதான பிராடென் யாப்புக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய பிரம்படித் தண்டனையை உயர் நீதிமன்ற நீதிபதி அபு பக்கர் கத்தார் மறு பரிசீலனை செய்தார்.
இது தொடர்பாக இளையரின் வழக்கறிஞர் ஜி.கே. ஸ்ரீதரன் மற்றும், தற்காப்புத் தரப்பு வழக்கறிஞருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் இளையருக்குப் பிரம்படி தண்டனை விதிக்க அவர் தடை விதித்தார்.
கீழ் நீதிமன்றம், ஓராண்டு நன்னடத்தைக் கண்காணிப்பின் கீழ் இளையரை வைக்கவும் நீதிமன்றத்தில் அனைவரின் முன்னிலையில் லேசான ஏழு பிரம்படி கொடுக்கவும் உத்தரவிட்டது.
ஆனால் உயர்நீதிமன்றத்தின் முடிவால் ஒராண்டு நன்னடத்தைக் கண்காணிப்பை மட்டுமே இளையர் நிறைவேற்ற வேண்டும்.
குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 293ன்கீழ் இரண்டு தண்டனைகள் வழங்க முடியாததால் நீதிபதி இம்முடிவை எடுத்தாக வழக்கறிஞர் ஸ்ரீதரன் விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி ஒரு பெண் நாயை அடித்து தீ வைத்துத் தாள முடியாத வலி ஏற்படுத்திய கொடூரமான குற்றச்செயல் புரிந்ததை யாப் ஒப்புக்கொண்டார்.

