வாஷிங்டன்: அமெரிக்காவின் எதிர்காலத்தைப் பாதிக்கும் கடன் உச்சவரம்பு விவகாரத்தில் அதிபர் பைடனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற ஜி7 உச்சநிலை மாநாட்டை அவசர மாக முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள அவர் குடியரசுக் கட்சியின் சபாநாயகர் கெவின் மெக்கர்த்தியுடன் மற்றொரு சுற்றுப் பேச்சு நடத்துகிறார். இந்த விவகாரத்தில் ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. குடியரசுக்குக் கட்சியின் கோரிக்கை ஏற்க முடியாததாக இருக்கிறது என்று திரு ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்க கருவூலத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஜூன் 1ஆம் தேதி காலக்கெடுவுக்குள் அதிக கடன் வாங்க நாடாளுமன்றம் அனுமதி வழங்கியாக வேண்டும். ஆனால் இரு தரப்பினருக்கும் சமரசம் ஏற்படுவதாக இல்லை.
குடியரசுக் கட்சி செலவுகளை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
'ஜி7' மாநாட்டை முடித்துக் கொண்டு வாஷிங்டன் திரும்பு வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் பைடன், கடன் உச்ச வரம்பை உயர்த்து வதற்காக செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்ற குடியரசுக் கட்சியின் நிபந்தனை ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
"எதிர்த்தரப்பினர் தங்களுடைய நிலையிலிருந்து மாற வேண்டும்," என்றார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை டுவிட்டர் பதிவில், சமூக, சுகாதார உதவிகளைக் குறைக்கும் நிபந்தனைகளைத் திட்டவட்டமாக எதிர்ப் பதாக பைடன் தெரிவித்திருந்தார்.

