அரசமைப்புச் சட்டத்தை மாற்றி எழுத தாய்லாந்துக் கூட்டணி உறுதி

அரசமைப்புச் சட்டத்தை மாற்றி எழுத தாய்லாந்துக் கூட்டணி உறுதி

2 mins read
2646e533-383d-477d-872d-6e8f3448431b
-

பேங்­காக்: தாய்­லாந்­தில் அண்­மை­யில் நடை­பெற்ற தேர்­த­லில் பெரும்­பான்மை இடங்­களில் வெற்­றி­பெற்ற எட்டு அர­சி­யல் கட்­சி­க­ளின் கூட்­டணி, நாட்­டின் அர­ச­மைப்­புச் சட்­டத்தை மாற்றி எழு­து­வ­தன் தொடர்­பில் இணக்­கம் கண்­டுள்­ளன.

ஒரே பாலி­னத்­தைச் சேர்ந்­த­வர்­கள் திரு­ம­ணம் செய்­து­கொள்­ளு­தல், கட்­டாய தேசிய சேவையை முடி­வுக்­குக் கொண்டு­வ­ரு­தல் உள்­ளிட்ட 23 அம்­சங்­கள் தொடர்­பில் அக்­கட்சி­கள் இணக்­கக் குறிப்­பில் கையெ­ழுத்­திட்­டுள்­ளன.

இருப்­பி­னும் அரச குடும்­பத்­தி­ன­ருக்கு எதி­ராக அவ­தூறு பேசிய குற்­றத்­துக்கு 15 ஆண்­டு­கள் வரை­யி­லான சிறைத்­தண்­டனை விதிக்­கும் சட்­டத்­தில் திருத்­தம் செய்­வது குறித்து அந்த இணக்­கக் குறிப்­பில் எது­வும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என்று ஊட­கங்­கள் கூறின.

இம்­மா­தம் 14ஆம் தேதி தாய்­லாந்­தில் பொதுத் தேர்­தல் நடை­பெற்­றது. அதில் 'மூவ் ஃபார்வர்ட்' கட்சி அதிக இடங்­களில் வெற்­றி­பெற்­றது. அதன் தலை­வர் பிட்டா லிம்­ஜ­ரோன்­ராட் பிர­த­மர் பொறுப்பை ஏற்­ப­தற்கு கூட்­டணி ஆத­ர­வ­ளிக்­கிறது. அக்­கட்­சி­யின் தேர்­தல் வாக்­கு­று­தி­களில் முக்­கி­ய­மா­னது அரச குடும்­பத்­துக்கு எதி­ரான அவ­தூறு தொடர்­பில் சிறைத்­தண்­டனை விதிக்­கும் சட்­டத்­தில் திருத்­தம் செய்­தல்.

500 இடங்­க­ளைக் கொண்ட தாய்­லாந்து நாடா­ளு­மன்­றத்­தில் எட்­டுக் கட்­சி­கள் கூட்­டணி 313 இடங்­க­ளைப் பெற்­றுள்­ளது. 250 செனட்­டர்­கள் வாக்­க­ளிப்பதன் அடிப்­ப­டை­யி­லேயே பிர­த­மர் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வார்.

வாக்­க­ளிப்பு நிறை­வ­டைந்து 60 நாள்­க­ளுக்­குப் பிறகே தாய்­லாந்­துத் தேர்­தல் ஆணை­யம் தேர்­தல் முடி­வு­களை அங்­கீ­க­ரிக்­கும். அதன் பிறகு நாடா­ளு­மன்­றம் கூடிப் பிர­த­ம­ரைத் தேர்ந்­தெ­டுக்­க­லாம். அரச குடும்­பத்­துக்கு எதி­ரான அவ­தூ­றுக்கு சிறைத்­தண்­டனை விதிக்­கும் சட்­டத்­தில் திருத்­தம் செய்­தல் தொடர்­பில் செனட்­டர்­கள் சிலர் ஏற்­கெனவே திரு பிட்டா பிர­த­மர் பதவி ஏற்­ப­தற்கு எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர்.