ஆஸ்திரேலியா- இந்தியா குடியேற்ற ஒப்பந்தம்

ஆஸ்திரேலியா- இந்தியா குடியேற்ற ஒப்பந்தம்

2 mins read
ebc7b407-1c97-4b5f-88dd-df49df5df222
-

சிட்னி: இந்­தி­யா­வும் ஆஸ்­தி­ரே­லி­யா­வும் இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான குடி­யேற்ற ஒப்­பந்­தத்தை அறி­வித்­துள்­ளன.

இரு­த­ரப்பு பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்­து­வது இதன் நோக்­க­மா­கும்.

இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி புதன்­கி­ழமை சிட்­னி நகரில் ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஆண்­டனி அல்­ப­னி­சைச் சந்­தித்­தப்­போது குடி­யேற்ற ஒப்­பந்­தம் குறித்து அறி­விக்கப்பட்டது.

இரு நாடு­க­ளுக்கு இடையே மாண­வர்­கள், பட்­ட­தா­ரி­கள், கல்வி ­ஆய்­வா­ளர்­கள் மற்­றும் வர்த்­தக மக்­கள் நட­மாட்­டத்தை மேம்­ப­டுத்­தும் நோக்­கில் இரு­ தரப்பு குடி­யேற்ற ஒப்­பந்­தம் வகுக்கப்பட்டுள்ளது.

இரு தலை­வர்­களும் வட்­டா­ரப் பாது­காப்பு, அதி­க­ரித்து வரும் பதற்­றம் குறித்­தும் விவா­தித்­த­னர்.

இந்­தி­யா­வும் ஆஸ்­தி­ரே­லி­யா­வும் ஜப்­பான் மற்­றும் அமெ­ரிக்­காவை உள்­ள­டக்­கிய குவாட் அமைப்­பின் உறுப்பு நாடு­க­ளா­கும்.

கடந்த வாரம் சிட்­னி­யில் இந்த அமைப்­பின் கூட்­டம் நடை­பெ­று­வ­தாக இருந்­தது. ஆனால் கடன் உச்ச வரம்பு பிரச்­சினை கார­ண­மாக அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் அவ­ச­ர­மாக நாடு திரும்பிவிட்­டார்.

இருந்தாலும் இந்தியப் பிரதமர் மோடி சிட்னி சென்று ஆஸ் ரேலியப் பிரதமரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

2014ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு திரு மோடி மேற்கொண்ட முதல் பயணம் இது. இரு மாதங்களுக்கு முன்பு கடந்த மார்ச் மாதம் பிரதமர் அல்பனிஸ் இந்தியாவுக்கு வருகையளித்தார்.

குடியேற்ற ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறிய இந்தியர்கள் கணிசமான அளவில் உள்ளனர்.

2016ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களில் கிட்டத்தட்ட கால் பகுதிவாசியினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக் கிறது.

இறுதி செய்யப்பட்ட குடியேற்ற ஒப்பந்தத்தின் கீழ் 'மேட்ஸ்' (Mates-Mobility Arrangement for Talented Early Professionals Scheme) எனும் திட்டம் செயல் படுத்தப்படும். இது, இந்தியாவுக் காக உருவாக்கப்பட்ட சிறப்புத் திட்டமாகும்.

இதற்கிடையே பத்து அணிகள் பங்கேற்கும் 13வது 50 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை காண இந்தியா வருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிசுக்கு திரு மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் போட்டி அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.