நான்கு நிமிடங்களுக்கு ஒருவர் கொவிட்-19க்கு பலி

நான்கு நிமிடங்களுக்கு ஒருவர் கொவிட்-19க்கு பலி

1 mins read
a9dcb135-6e80-435c-a63d-ece5ef4ee081
-

வாஷிங்­டன்: கொவிட்-19 கொள்­ளை­நோய் அதி­கா­ர­பூர்­வ­மாக முடி­வுக்கு வந்து மூன்று ஆண்­டு­க­ளுக்கு மேல் ஆகிறது.

ஆனால் இன்­ன­மும் நான்கு நிமி­டங்­க­ளுக்கு ஒரு­வர் அந்­தக்கிரு­மிக்கு உயி­ரி­ழந்து வரு­கின்­ற­னர்.

தடுப்­பூசி முழு­மை­யாக போடாத நாடு­க­ளி­லும் எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­யவர்­க­ளுக்­கும் கொவிட்-19 ஆபத்­தாக விளங்­கு­கிறது.

பெரும்­பா­லோ­ருக்கு கிரு­மி­யின் அச்­சு­றுத்­தல் குறை­வாக இருந்­தா­லும் மக்­கள்­தொ­கை­யில் குறிப்­பிட்ட ஒரு பகு­தி­யி­னர் ஆபத்தை எதிர்­நோக்­கி­யுள்­ள­னர். முன்பு எதிர்­பார்த்­த­தை­விட கிரு­மி­யால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை மிக அதி­க­மாக உள்­ளது.

அமெ­ரிக்­கா­வில் 2022ஆம் ஆண்­டில் இதய நோய்க்கு அடுத்­த­தாக கொவிட்-19 மூன்­றா­வது ஆகப்­பெ­ரிய உயிர்க்­கொல்­லி­யாக இருந்­துள்­ளது.

மர­ணங்­களை ஏற்­ப­டுத்­தும் புகை­பி­டித்­தல், போக்­கு­வ­ரத்து விபத்து போன்ற பொது­வான கார­ணங்­க­ளால் கடு­மை­யான பாது­காப்­புச் சட்­டங்­கள் இயற்­றப்­ப­டு­கின்­றன. ஆனால் கொவிட்-19 விவ­கா­ரத்­தில் கட்­டா­யத் தடுப்­பூசி, மூடப்­பட்ட இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­வது போன்ற கிரு­மி­யால் பாதிக்­கும் வழி­களை அர­சி­யல்­வா­தி­கள் வலி­யு­றுத்­து­வ­தில்லை என்று மிசௌ­ரி­யில் உள்ள செயின்ட் லூயிஸ் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு கட்­ட­மைப்­பின் தொற்­று­நோ­யி­யல் மையத்­தின் இயக்­கு­நர் திரு ஜியாத் அல்-அலி தெரி­வித்­தார். கொவிட்-19 இன்­னும் பல­ரைத் தொற்றுக் கிருமி கொன்று வரு­கிறது என்­றார் அவர்.