'மலேசியர்களால் உரிமை கோராத 11 பில்லியன் ரிங்கிட்'

'மலேசியர்களால் உரிமை கோராத 11 பில்லியன் ரிங்கிட்'

1 mins read
278136ab-d479-46e3-9339-b8a55c7a8f39
-

கோலாலம்பூர்: பொதுமக்களுக்குச் சொந்தமான 11.2 பில்லியன் ரிங்கிட் ஏப்ரல் 30ஆம் தேதி வரை உரிமை கோரப்படாமல் உள்ளது என்று மலேசிய துணை நிதி அமைச்சர் அஹமட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

இதில் 70 விழுக்காடு கடந்த ஏழு அல்லது மேற்பட்ட ஆண்டுகளில் மலேசியர்கள் பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்குகளில் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

"பெரும்பாலான கோரப்படாத பணம் வர்த்தக கணக்குகளில் போனஸ் மற்றும் ஈவுத் தொகையாக வழங்கப்பட்டவை.

நேற்று வரை 3.2 பில்லியன் ரிங்கிட் பொதுமக்களுக்குத் திருப்பி தரப்பட்டுள்ளது.

"உரிமை கோரப்­ப­டாத பணம், வர்த்­தக கணக்­கு­களில் ஒரு வருட காலத்­தில் செலுத்­தப்­பட்ட போனஸ், ஈவுத்­தொகை ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கி­யது.

மொத்த தொகை­யில் உரிமை கோரப்­ படாத பணத்­தில் 70 விழுக்­காடு ஏழு ஆண்­டு­கள் மற்­றும் அதற்கு மேல் செயல்­ப­டாத வங்­கிக் கணக்­கு­களில் இருந்து வந்­தது," என்று நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் அஹ­மட் தெரி­வித்­தார்.

பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணி­யைச் சேர்ந்த புக்­கிட் பிந்­தாங் உறுப்­பி­ன­ரான ஃபோங் குய் லுன் கேட்ட கேள்வி ஒன்­றுக்கு அவர் அவ்­வாறு பதி­ல­ளித்­தார்.

கோரப்­ப­டாத பணம் எவ்­வ­ளவு, அவை தேசிய வளர்ச்­சிக்கு எந்த வகை­யில் பயன்­ப­டுத்­தப்­படும் என்று திரு ஃபோங் குய் லுன் கேள்­வி­ எ­ழுப் பி­யி­ருந்­தார்.