வாஷிங்டன்: குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஃபுளோரிடா ஆளுநர் ரோன் டிசான்டிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 18 மாதங்களாக முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் ஆளுநர் ரோன் டிசான்டிசுக்கும் இடையே அதிபர் தேர்தலில் போட்டியிடுவது கடுமையான போட்டா போட்டி நிலவியது. டோனல்ட் டிரம்ப் பல குற்றவியல் வழக்குகளை எதிர்நோக்கினாலும் கருத்துக் கணிப்பில் அவர் முன்னணி வகிக்கிறார்.
குடியரசுக் கட்சியில் ரோன் டிசான்டிஸ் வளர்ந்துவரும் நட்சத் திரமாக இருந்தாலும் டோனல்ட் டிரம்ப் தொடர்ந்து தாக்கிப் பேசியதில் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் 44 வயது ஆளுநர் ரோன் டிசான்டிஸ் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடு வதற்கு முன்பு வேட்பாளருக்கான மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். சமூக ஊடக நேரலையின் போது டுவிட்டர் உரிமையாளர் எலன் மாஸ்க்குடன் உரையாடும் நிகழ்ச்சியில் தாம் போட்டியிடுவது குறித்து ரோன் டிசான்டிஸ் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.