கோலாலம்பூர்: 'டத்தோ ரோய்' என்றழைக்கப்படும் வர்த்தகர், மலேசிய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் ஆகிய இருவர் மீது 400,000 ரிங்கிட் லஞ்சம் கேட்டதாக நேற்று நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது. இருவரும் முன்னாள் பிரதமர் முகைதீன் யாசினின் மகன் விவகாரம் தொடர்பான விசாரணையில் லஞ்சம் கேட்டதாகத் தெரி கிறது. 'டத்தோ ரோய்' என அழைக்கப்படும் முஹமட் ஹுசைன் முஹமட் நாசர், 54, மற்றொரு நபரான முஹமட் ரஸிடி முஹமட் சயித், 43 என் பவருடன் சேர்ந்து குற்றம் சுமத்தப்பட்டார்.
ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தியபோது ஃபக்ரி யாசின் மஹியாதினை தடுப்புக் காவலில் வைக்கக்கூடாது என்பதற்காக இருவரும் லஞ்சம் எதிர்பார்த்தாகக் கூறப்படுகிறது.
இந்தக் குற்றச்செயல், மார்ச் 5ஆம் தேதி இரவு 9.00 மணியிலிருந்து 11.00 மணி வரை லோரோங் குராவில் உள்ள ஒரு உணவகத்தில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

