சிலாங்கூர்: கர்ப்பத்தை மறைக்க மறுத்த காதலியை கத்தியால் குத்திக் கொன்ற சந்தேகத்தில் மலேசிய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடையாளங்களை மறைக்க ஆடவர் இரண்டு முறை பெண்ணின் சடலத்திற்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை காலை சிலாங்கூரில் உள்ள சுங்காய் புசார் பகுதியில் உள்ள செம் பனைத் தோட்டம் ஒன்றில் பாதி எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சந்தேக நபர் பிடிபட்டார்.
கைது செய்யப்பட்ட நபருக்கு 20 வயது, அவர் அண்மையில் தான் கல்லூரியில் படிப்பை முடித்தார்.
சந்தேக நபர், அந்த 21 வயது பெண்ணை திங்கட்கிழமை செம்பனைத் தோட்டத்திற்கு அழைத்து சென்றதாகவும் அதன் பின்னர் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையாக மாறியதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது. கொல்லப்பட்ட பெண் கிட்டத்தட்ட 4 மாதம் கர்ப்பம் என நம்பப்படுகிறது. புலன் விசாரணைத் தொடர்கிறது.

