சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஓர் ஏழு மாடிக் கட்டடத்தில் தீ மூண்டதன் தொடர்பில் இரண்டு 13 வயது சிறுவர்கள் சரணடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய சிட்னியில் இருக்கும் காலியான ஆலையில் நேற்று முன்தினம் தீ மூண்டது. ஒரு காலத்தில் தொப்பி செய்யும் ஆலையாக இருந்த அதில் வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அதன் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாக ஆஸ்திரேலியக் காவல்துறை கூறியது.